Connect with us

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச முடிவு..!! பேட்டிங்கில் அதிரடியை தொடருவாரா ரிங்கு சிங்

Featured

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச முடிவு..!! பேட்டிங்கில் அதிரடியை தொடருவாரா ரிங்கு சிங்

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது .

தென்னாப்பிரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 டெஸ்ட்,3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் முன்னணி வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா இருவருக்கும் டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது .

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணிக்கு ரோஹித் சர்மா கேப்டனாகவும் , ஒருநாள் போட்டிகளில் விளையாடும் இந்திய அணிக்கு கே.எல். ராகுல் கேப்டனாகவும் , டி20 போட்டியில் விளையாடும் இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறுகிறது.இந்த போட்டியில் இந்த அணிக்கு எதிராக டாஸ் வென்றுள்ள தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது .

இதையடுத்து தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.கடந்த போட்டியில் அபாரமாக ஆடிய இளம் வீரர் ரிங்கு சிங் இந்த போட்டியிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு பலமான ரன்களை எடுத்து கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வெற்றியை ருசி பாக்குமா அல்லது தோல்வியை சந்திக்குமா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார் இயக்குநர் நெல்சன்..!!

More in Featured

To Top