Connect with us

இங்கிலாந்தைப் புரட்டி எடுத்து அபார வெற்றி பெற்றது இந்திய அணி.!!

Featured

இங்கிலாந்தைப் புரட்டி எடுத்து அபார வெற்றி பெற்றது இந்திய அணி.!!

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தரமான சாதனையை படைத்துள்ளது .

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தீவிரமாக விளையாடி வருகிறது.

இதில் அனல் பறக்க நடைபெற்ற 2 டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 1 போட்டியிலும், இந்தியா 1 போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை 1-1 என புள்ளிகளில் இருந்தது .

.இதையடுத்து இந்த இரு அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் உள்ள பிரபல கிரிக்கெட் ,மைதானத்தில் நடைபெற்றது.

முதல் இன்னிங்ஸில் இந்தியா 445 மற்றும் இங்கிலாந்து 319 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 430 ரன்கள் அடித்து 557 ரன்களை இங்கிலாந்து அணிக்கு இலக்காக வைத்தது.

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்ற இந்த போட்டியில் குட்டி புலி ஜெய்ஸ்வால் அபாரமாக ஆடி 214 ரன்கள் எடுத்து அசத்தினார் .

மறுப்புரை சிறப்பாக விளையாடிய இளம் புயல் சுப்மன் கில்லின் 91 ரன்கள் எடுத்து சதத்தை தவறவிட்டார் . பின்னர் பேட்டிங்கில் அதிரடி காட்டிய சர்ஃபராஸ் கான் அரை சதம் கடந்து எதிரணியை மிரட்டினார்.

இந்தியர்களின் இந்த அபார ஆட்டத்தால் 556 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், மிகப்பெரிய இலக்கை துரத்தியது இங்கிலாந்து அணி.

ஆனால் ஆரம்பம் முதல் சொதப்பிய இங்கிலாந்து அணி ரவிந்திர ஜடேஜாவின் சுழலில் சிக்கி உருக்குலைந்து போனது தட்டுத்தடுமாறி ஆடிய அந்த அணி 122 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.

இதன்காரணமாக 434 ரன்கள் என்ற மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அணி அபார வெற்றி பெற்றது.

இந்திய அணியின் இந்த அட்டகாச வெற்றிக்கு பல தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  23 வகை வெளிநாட்டு நாய்களுக்கு தமிழ்நாட்டில் தடை – அதிரடி அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு..!!

More in Featured

To Top