Connect with us

இந்தியா – ஆஸி மோதும் 5வது டி20 தொடர் – டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச முடிவு..!!

Featured

இந்தியா – ஆஸி மோதும் 5வது டி20 தொடர் – டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச முடிவு..!!

இந்திய – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் கடைசி மற்றும் 5 வது டி20 போட்டியில் இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச முடிவு செய்துள்ளது.

விறுவிறுப்பும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்ற உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டி20 கிரிக்கெட் தொடருக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்து வருகின்றனர் .

5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இதுவரை 4 போட்டிகளில் நடைபெற்று முடிந்த நிலையில் 1 போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் 3 போட்டியில் அசத்தல் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரையும் கைப்பற்றி உள்ளது .

இந்நிலையில் இந்திய – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5வது டி20 கிரிக்கெட் போட்டி பெங்களூரில் உள்ள பிரபல கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு நடைபெறுகிறது . இந்த போட்டியில் இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.

இதையடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி தற்போது பேட்டிங் செய்ய உள்ளது. மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த போட்டியில் இந்திய அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அர்ஷ்தீப் சிங் – IN
தீபக் சஹார் – OUT

துணை கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த தடாரின் கடைசி டி20 போட்டியில் விளையாட இருக்கும் இந்த இரு அணிகளில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அந்த தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம் .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஊழலை எதிர்த்து நின்றால் கைது செய்வீர்களா..? - கொதிக்கும் அன்புமணி

More in Featured

To Top