Connect with us

பஞ்சாப் பந்துகளை பறக்கவிட்ட கில் – குஜராத் அணி 199 ரன்கள் குவிப்பு..!!!

Featured

பஞ்சாப் பந்துகளை பறக்கவிட்ட கில் – குஜராத் அணி 199 ரன்கள் குவிப்பு..!!!

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி பஞ்சாப் அணிக்கு 200 ரன்களை இலக்காக வைத்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் ஹைதராபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் பஞ்சாப் – குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது

இந்த போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச முடிவு செய்தது . இதையடுத்து பஞ்சாப் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் சுப்மன் கில், ரித்திமான் சாஹா ஆகியோர் களமிறங்கினர். இதில் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்த்த ரித்திமான் சாஹா சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர்.

அடுத்து வந்த கேன் வில்லியம்சன் நிதானமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் அவரும் 26 ரன்களில் அவுட்டானார் .

இறுதி வரை கம்பீரமாக ஆடிய சுப்மன் கில் 48 பந்துகளில் 89 ரன்களை குவித்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த குஜராத் அணி 199 ரன்களைச் சேர்த்தது.

இதையடுத்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களத்தில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ படத்தின் அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்..!!!

More in Featured

To Top