Connect with us

பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட 8 வீரர்களை அணியில் இருந்து விடுவித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி..!!

Featured

பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட 8 வீரர்களை அணியில் இருந்து விடுவித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி..!!

நடப்பு ஐபிஎல் தொடரில் பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட 8 வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் கோலாகலமாக நடைபெற உள்ளது . இதன் காரணமாக உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடத்தி முடிக்கப்படும் என்று ஒருபக்கம் கூறப்படுகிறது.

இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் தொடங்கப்பட உள்ள நிலையில் தங்கள் அணியின் சில வீரர்களை விடுவித்து கொள்ளவும் சில வீரர்களை தக்கவைத்து கொள்ளவும் அணைத்து அணிகளுக்கும் அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்களின் பெயர்களை தற்போது ஒவ்வொரு அணிகளும் வெளியிட்டு வருகின்றன .

அந்தவகையில் ஐபிஎல் தொடரில் கடந்தாண்டு ₹16.2 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட பென் ஸ்டோக்ஸை அணியில் இருந்து விடுவித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் இவருடன் சேர்த்து டுவைன் பிரெட்டோரியஸ், அம்பதி ராயுடு, சிசாண்டா மகாலா, கைல் ஜேமிசன், பகத் வர்மா, சேனாபதி, ஆகாஷ் சிங் ஆகியோரையும் அணியில் இருந்து சிஎஸ்கே விடுத்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பஞ்சாப் அணியிடம் இதனால் தான் தோற்றோம் - அடுக்கடுக்கான காரணங்களை அடுக்கிய CSK கேப்டன் ருதுராஜ்..!!

More in Featured

To Top