Connect with us

இயக்குனர் சேரன் வீட்டில் நடந்த சோகமான நிகழ்வு…வருத்தத்தில் குடும்பத்தினர்!

Cinema News

இயக்குனர் சேரன் வீட்டில் நடந்த சோகமான நிகழ்வு…வருத்தத்தில் குடும்பத்தினர்!

இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் தான் நடிகர் இயக்குனர் சேரன் அவர்கள்….இதையடுத்து கடந்த 1997-ம் ஆண்டு வெளிவந்த பாரதி கண்ணம்மா என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் அடுத்தடுத்து பொற்காலம்,தேசிய கீதம் போன்ற படங்களை இயக்கினார்…அதில் அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது…

இதையடுத்து 2000-ம் ஆண்டு சேரன் இயக்கத்தில் முரளி, பார்த்திபன் நடிப்பில் வெளிவந்த வெற்றி கொடிகட்டு திரைப்படம் தேசிய விருதை வென்று அசத்தியது…அதன் மூலம் பலருக்கு பிடித்த இயக்குநராகவே இவர் மாறி விட்டார் என்றும் சொல்லலாம்…

பின்னர் சொல்ல மறந்த கதை, தவமாய் தவமிருந்து, ஆட்டோகிராப் போன்ற ஆகச்சிறந்த தமிழ் படங்களை இயக்கி குடும்பங்கள் மனதை கவர்ந்த இயக்குனராக உருவெடுத்தார் சேரன் அவர்கள்…

இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் திருமணம் என்பதாகும்…இப்படம் பெரிதாக மக்களை கவரவில்லை..சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த தமிழ்குடிமகன் திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது வெப் தொடர் ஒன்றை இயக்கும் பணிகளில் பிசியாக ஈடுபட்டு வருகிறார் சேரன்..அதனை போல கன்னடத்தில் ஒரு படத்தையும் இயக்குகிறார்….இந்த நிலையில் அவரது வீட்டில் ஒரு மீளா துயர் ஒன்று நிகழ்ந்து இருக்கின்றது.

சேரனின் தந்தை எஸ்.பாண்டியன் உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளார் அவருக்கு வயது 84. தந்தையின் மறைவால் சோகத்தில் மூழ்கி இருக்கும் சேரனுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்..இந்த துயரினால் வருத்தத்தில் இருக்கின்றனர் குடும்பத்தினர்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திரையரங்குகளில் வசூல் மழை பொழியும் ஸ்டார் படம் - 6 நாட்களில் எவ்ளோ வசூல் தெரியுமா..?

More in Cinema News

To Top