Connect with us

சர்ச்சையில் சிக்கிய இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான்..என்ன காரணம் தெரியுமா??

Cinema News

சர்ச்சையில் சிக்கிய இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான்..என்ன காரணம் தெரியுமா??

கடந்த செப்டம்பர் மாதம் சென்னையில் ரஹ்மான் நடத்திய மறக்குமா நெஞ்சம் என்கிற இசைக்கச்சேரியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்…இது இவருக்கு மிகவும் கெட்ட பெயரை கொடுத்தது..

இது சமூக வலைதளங்களில் பெரிதும் பேசு பொருளாக மாறியதை அடுத்து மன்னிப்பு கேட்ட ஏ.ஆர்.ரகுமான், ரசிகர்களுக்கு பணத்தையும் திருப்பி அனுப்பினார். இந்த நிலையில், தற்போது அவர் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்..இந்த சர்ச்சை இப்போது அதிகம் பேசப்படுகின்றது..

கடந்த நவம்பர் 10-ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீஸ் ஆன திரைப்படம் தான் பிப்பா. இப்படத்தை ராஜா மேனன் என்பவர் இயக்கி இருந்தார். இப்படம் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போரை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார்…இது பெரிதும் பேசவும் பட்டது..

பாடலை இந்த காலத்திற்கு ஏற்ப மறு உருவாக்கம் செய்திருந்தார் ஏ.ஆர்.ரகுமான். அந்த பாடல் தான் தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளது. இந்த பாடலை அவர் சரியாக மறு உருவாக்கம் செய்யவில்லை என்றும் நஸ்ரூலின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்..நஸ்ரூலின் தான் இந்த பாடல் அமைப்பாளர்..அதனால் அவரின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "பெரு வெள்ளத்தில் சிக்கிய ஆமிர்கான், விஷ்ணு விஷால்" ஓடி வந்து நலம் விசாரித்த அஜித்..!!

More in Cinema News

To Top