Connect with us

இந்த விஷயத்துல அரசியல் பண்ண விரும்பல – என் மண் என் மக்கள் நடைப்பயணத்தில் பகீர் கிளப்பிய அண்ணாமலை..!!

Featured

இந்த விஷயத்துல அரசியல் பண்ண விரும்பல – என் மண் என் மக்கள் நடைப்பயணத்தில் பகீர் கிளப்பிய அண்ணாமலை..!!

திமுக ஆட்சிக்கு இன்னும் 30 மாத காலம் இருக்கிறது. அதற்குள் சின்ன சின்ன பிரச்சனைகளை வைத்து நான் அரசியல் செய்ய விரும்பவில்லை என தமிழ்நாடு பாஜக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக சார்பில் என் மண் என் மக்கள் நடைபயணம் மேற்கொள்ள வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று வேதாரண்யத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் வரும் டிசம்பர் 5-ஆம் தேதி வரை தனது சுற்றுப்பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.

பிரச்சாரத்தின்போது மக்களிடம் பேசிய அண்ணாமலை கூறியதவாது :

திமுக ஆட்சிக்கு 30 மாத காலம் இருக்கிறது. அதற்குள் மழைநீர் தேங்கும் பிரச்னையை முழுவதுமாக சரி செய்யவேண்டும். இந்த விவகாரத்தில் எனக்கு அரசியல் செய்ய விரும்பவில்லை. இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க தமிழக முதல்வர் மட்டுமல்ல நானும் கடிதம் எழுதிவருகிறேன்.

இலங்கை வசம் சிக்கியுள்ள தமிழக மீனவர்களின் விசைப்படகுகளுக்கு மத்திய அரசின் மானியம் வழங்கப்பட்டுள்ளது. கச்சத்தீவை மீட்டால் மட்டுமே தமிழக மீனவர்கள் பிரச்னை தீரும். கச்சத்தீவு நம்மிடம் இல்லாத காரணத்தால் இந்தியா- இலங்கை எல்லை பிரச்னை இருந்து வருகிறது. இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகிறது.

தெலுங்கானா சட்டபேரவை தேர்தலில் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். டிஆர்எஸ் கட்சிக்கு எதிராக மக்கள் வாக்களிக்க முடிவு செய்துள்ளனர். மோடி, அமித்ஷா, நட்டா ஆகியோருடன் நானும் தெலுங்கானாவில் பிரச்சாரம் செய்துள்ளேன். மாற்றம் வரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கொல்கத்தா மண்ணில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச முடிவு - பேட்டிங்கில் மிரட்டுமா கொல்கத்தா..?

More in Featured

To Top