Connect with us

வளர்ப்பு மக்களால் நடிகை ஷகிலாவுக்கு நேர்ந்த சோகம் – வெளியான பரபரப்பு தகவல்.

Cinema News

வளர்ப்பு மக்களால் நடிகை ஷகிலாவுக்கு நேர்ந்த சோகம் – வெளியான பரபரப்பு தகவல்.

நடிகை ஆசை ஆசையாக வளர்த்த அவரின் வளர்ப்பு மகள் ஷீத்தல் நடிகை ஷகிலாவை கொடூரமாக தாக்கி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அன்றைய காலகட்டத்தின் மிகவும் பிஸியான நடிகையாக வலம் வந்த இவர் மலையாள திரையுலகில் கொடிகட்டி பறந்தார் . எத்தனை நடிகைகள் இவர் முன் போட்டிக்கு வந்தாலும் இவரது மார்க்கெட் மட்டும் ஜெட் வேகத்தில் வான்நோக்கி சென்றது .

நெடு நீண்ட நாட்களாக பெரிய திரையில் கவர்ச்சி வேடங்களில் நடிப்பதை முழுவதுமாக நிறுத்திய ஷகீலா தற்போது சின்னத்திரையில் அவருக்கு பிடித்ததை செய்து அவர் உண்டு அவர் வேளை உண்டு என இருந்து வருகிறார் .

இதுமட்டுமின்றி நடிகை சசிகலா திருநங்கைகள் பலரை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் . அவர்கள் அதீத அன்பும் காட்டி வருகிறார்.

இந்நிலையில் நடிகை ஷகிலாவின் வளர்ப்பு மகள்களில் ஒருவரான ஷீதித்தல் ஷகிலாவை கொடூரமாக தாக்கி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

கோடம்பாக்கத்தில் வசித்துவரும் நடிகை ஷகிலாவை அவரது வளர்ப்பு மகளான ஷீத்தல் (19) சரமாரியாக
தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஷகிலாவை அடித்து கீழே தள்ளியுள்ளார் ஷீத்தல். சமாதானப்படுத்தச் சென்ற வழக்கறிஞர் சௌந்தர்யா மீதும் ஷீத்தல் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதையடுத்து நடிகை ஷகிலா அளித்த புகாரின்பேரில் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நடிகர் சங்க கட்டடப் பணிக்கு நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதி உதவி..!!!

More in Cinema News

To Top