Connect with us

சாதிக்கத்துடிக்கும் பெண்கள் மீது அரங்கேறும் அத்துமீறல் – வேதனை தெரிவித்த நடிகை பிரியங்கா மோகன்..!!

Cinema News

சாதிக்கத்துடிக்கும் பெண்கள் மீது அரங்கேறும் அத்துமீறல் – வேதனை தெரிவித்த நடிகை பிரியங்கா மோகன்..!!

திரையுலகில் சாதிக்க துடிக்கும் இளம் பெண்களுக்கு நேரிடும் அநீதிகள் குறித்து நடிகை பிரியங்கா மோகன் மிகவும் கோபமாக பேசியுள்ளார்.

குளோபல் ஸ்டார் தனுஷ் நடிப்பில் படு பயங்கரமாக உருவாகி உள்ள திரைப்படம் தான் கேப்டன் மில்லர். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 12-ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாக உள்ளது .

இந்நிலையில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் படு பிரம்மாண்டமாக நடைபெற்றது . கோலாகலமாக நடைபெற்ற இந்த இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளினி ஐஸ்வர்யா ரகுபதியிடம் ஒரு வாலிபர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார் .

தனக்கு நேர்ந்த பாலியல் அதிமீறலை கண்டு கோபமடைந்த ஐஸ்வர்யா உடனே அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து மனம் திறந்து பேசியுள்ள கேப்டன் மில்லர் படத்தின் கதாநாயகி நடிகை பிரியங்கா மோகன்கூறியதாவது :

ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமான பாதுகாப்பு இருக்க வேண்டும். எல்லாரையும் மதிக்க வேண்டும். நமது வீட்டிலும் அம்மா, சகோதரிகள் உள்ளனர், அவர்களுக்கு மட்டும் ஏதாவது நடந்தால் சும்மா இருப்போமோ? ஆனால் நம்ப வேறொரு பெண்ணுக்கு தப்பான விஷயத்தை செய்யலாமா?” என பிரியங்கா மோகன் சற்று காட்டமாக பேசியுள்ளார் .

இதுமட்டுமின்றி திரையுலகில் சாதிக்க துடிக்கும் இளம் பெண்களுக்கு நேரிடும் அநீதிகள் இன்று நடைபெற்று வருவதாகவும் இதற்கு எப்போது விடுவிக்கலாம் வரப்போகிறது என்று தெரியவில்லை என்றும் நடிகை பிரியங்கா மோகன் வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மும்பை மண்ணில் பேட்டிங்கில் மிரட்டுமா கொல்கத்தா..? டாஸ் வென்ற மும்பை பந்துவீச முடிவு..!!

More in Cinema News

To Top