Connect with us

“அன்பான ரசிகர்களே..இப்போ நா ஓகே” காயத்தில் இருந்து மீண்டு வருவதாக நடிகர் சூர்யா தகவல்

Cinema News

“அன்பான ரசிகர்களே..இப்போ நா ஓகே” காயத்தில் இருந்து மீண்டு வருவதாக நடிகர் சூர்யா தகவல்

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த கங்குவா படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்துள்ள நடிகர் சூர்யாவின் தற்போதய ஹெல்த் அப்டேட் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் UV கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் கங்குவா. இப்படத்தில் கதாநாயகனாக சூர்யா நடிக்க அவருடன் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர்.

சென்னை பூந்தமல்லி அருகே உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது . இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்ற கங்குவா படப்பிடிப்பு தலத்தில் கயிறு அறுந்து விழுந்ததில், 80 கி.மீ வேகத்தில் வந்த கேமரா மோதி நடிகர் சூர்யாவுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு இந்த விபத்து ஏற்பட்டதால் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. நாளையுடன் நடிகர் சூர்யாவின் காட்சிகள் முழுவதும் முடிவடைய இருந்த நிலையில் விபத்தால் தற்போது படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் சூர்யா நலம் பெறவேண்டி அவரது ரசிகர்கள் இணையத்தில் தொடர்ந்து பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யாவின் தற்போதய ஹெல்த் அப்டேட் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. சிறிய காயமடைந்துள்ள நான் தற்போது நலமுடன் இருப்பதாக நடிகர் சூர்யாவே தெரிவித்துள்ளார்.

அன்பிற்குரிய நண்பர்கள் மற்றும் அன்பான ரசிகர்களே நான் விரைவில் குணமடைய வேண்டி, நீங்கள் அனுப்பிய குறுஞ்செய்திகளுக்கு மனமார்ந்த நன்றி. எனது உடல்நலம் சற்று முன்னேறி உள்ளது. உங்களின் அன்பிற்கு நன்றிக் கடன்பட்டுள்ளேன் என் நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  KGF புகழ் யஷ் முதல் கேரளத்து க்ளாஸிக் நாயகன் ஃபஹத் வரை : பிரபலங்கள் வாக்களித்த வைரல் போட்டோஸ்..!!!

More in Cinema News

To Top