Connect with us

போற இடமெல்லாம் போர்க்களமா இருந்தா என்னதான் செய்றது – நடிகர் மன்சூர் அலிகான் முன்ஜாமீன் மனு தள்ளுபடி..

Cinema News

போற இடமெல்லாம் போர்க்களமா இருந்தா என்னதான் செய்றது – நடிகர் மன்சூர் அலிகான் முன்ஜாமீன் மனு தள்ளுபடி..

நடிகை த்ரிஷா குறித்து ஆபாசமாக பேசிய வழக்கில் நடிகர் மன்சூர் அலிகானின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை திரிஷா உடன் நடிக்கிறேன் என்றதும், நிச்சயமாக ஒரு பெட்ரூம் சீன் இருக்கும், நடிகை குஷ்பூ, ரோஜாவை கட்டிலில் தூக்கி போட்டு நடித்ததை போல் த்ரிஷாவுடனும் அப்படி நடிக்கலாம் என்று நினைத்தேன் ஆனால் முடியாமல் போனது என நடிகர் மன்சூர் அலிகான் பேட்டி ஒன்றில் பேசியது இனையத்தில் வைரலான நிலையில் அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து காவல்துறை அவர் மீது வழக்கு பதிவு செய்து நேரில் ஆஜராகவும் சம்மன் அனுப்பியது . இதையடுத்து நேரில் ஆஜரான நடிகர் மன்சூர் அலிகான் த்ரிஷாவுக்கும் எனக்கும் உண்டான வழக்கு விசாரணைக்காக காவல்துறை எப்போது அழைத்தாலும் நான் வர தயாராக உள்ளேன் என நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்ததுடன் திர்ஷாவிடம் மன்னிப்பையும் கேட்டுவிட்டார் .

இந்நிலையில் முன்ஜாமின் கோரிய மன்சூர் அலிகான் மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

உள்நோக்கத்தோடு வேண்டுமென்றே பேசவில்லை த்ரிஷா சார்பில் புகார் அளிக்காத நிலையில் மகளிர் ஆணைய பரிந்துரையில் வழக்கு போடப்பட்டதாக மன்சூர் அலிகான் தரப்பு தெரிவித்த நிலையில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி ஜாமீன் மீதான தீர்ப்பை ஒத்திவைத்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சேலையில் Glamour போஸ் கொடுத்த நடிகை ஷில்பா மஞ்சுநாத் Trending Photos..

More in Cinema News

To Top