Connect with us

“ஆமா இவர் பிடிங்கனு சொல்கிறாரா இல்ல வேண்டாம்னு சொல்கிறாரா” ரசிகர்களுக்கு பீடி ரகசியம் சொன்ன நடிகர் மகேஷ் பாபு..!!

Cinema News

“ஆமா இவர் பிடிங்கனு சொல்கிறாரா இல்ல வேண்டாம்னு சொல்கிறாரா” ரசிகர்களுக்கு பீடி ரகசியம் சொன்ன நடிகர் மகேஷ் பாபு..!!

திரைப்படங்களில் தான் புகைபிடிக்கும் ஸ்பெஷல் புகையிலை குறித்த ரகசியத்தை நடிகர் மகேஷ் பாபு தற்போது வெளிப்படையாக கூறியுள்ளார்.

பொதுவாக எந்த மொழி சினிமாவை எடுத்துக்கொண்டாலும் ஹீரோவாக இருந்தாலும் சரி வில்லனாக இருந்தாலும் சரி திரையில் மாஸாக இருப்பதற்காக புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பது வழக்காமாக உள்ளது .

லோகேஷ் கூட்டணியில் சமீபத்தில் வெளியான லியோ படத்தில் தளபதி விஜய் புகைப்பிடிக்கும் காட்சி செம மாஸாக இருந்ததாக பலரும் பாராட்டினர் . அதேபோல் விக்ரம் படத்தில் ROLEX ஆக வந்த சூர்யா புகை பிடிக்கும் காட்சிகளையும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

அந்தவகையில் தற்போது பிரபல தெலுங்கு நடிகரான மகேஷ் பாபு சமீபத்தில் வெளியான குண்டூர் காரம் படத்தில் செம ஸ்டைலாக பீடி குடித்திருப்பார் .

இந்நிலையில் அந்த படத்தில் தான் புகைப்பிடித்தது பற்றி நடிகர் மகேஷ் பாபு அண்மையில் கொடுத்த பேட்டியில் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் தகவலையும் கூறி இருக்கிறார்.

குண்டூர் காரம் படத்தில் தான் பிடித்தது உண்மையான பீடி இல்லை. அதில் புகையிலை இல்லை, லவங்க இலைகளால் உருவாக்கப்பட்ட பீடி தான் என தெரிவித்து இருக்கிறார்.

மகேஷ் அந்த படத்தில் பிடித்தது பீடி இல்லை என்றே வைத்துக்கொண்டாலும் திரையில் பார்க்கும் அவரது ரசிகர்களுக்கு அது உண்மையான பீடி என்று தான் எண்ணத்தோன்றும் என்றும் அதிக ரசிகர்கள் கொண்ட பிரபல நடிகர்கள் இது போன்ற காட்சிகளில் நடிப்பதால் அவர்களது ரசிகர்களும் தடம் மாறி போக வாய்ப்பு உள்ளது என்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் பல ஆண்டுகளாக காட்டம் தெரிவித்து வருகின்றனர்.

திரையரங்கிற்கு படம் பார்க்க வரும் சினிமா ரசிகர்கள் படத்தை படமாக மட்டும் பார்த்து நல்ல விஷயங்களை உள்வாங்கி கொண்டு தீயதை திரையரங்குகளிலே விட்டுச்செல்வது நல்லது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தரம்சாலாவில் தர்மஅடி கொடுக்குமா CSK..? டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச முடிவு..!!

More in Cinema News

To Top