Connect with us

தனுஷ் இயக்கி நடிக்கும் இரண்டாவது படம்.. ஏப்ரல் 11இல் வெளியிட திட்டம்

Dhanush_D50_Movie

Cinema News

தனுஷ் இயக்கி நடிக்கும் இரண்டாவது படம்.. ஏப்ரல் 11இல் வெளியிட திட்டம்

நடிகர் தனுஷ் இரண்டாவது முறையாக இயக்கி நடிக்கும் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருவதாகவும், படத்தை ஏப்ரல் 11 அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, 2017இல் ராஜ்கிரண் மற்றும் ரேவதி நடிப்பில் வெளியான பவர் பாண்டி என்ற படத்தின் மூலம் நடிகர் தனுஷ் இயக்குனராக அவதாரம் எடுத்தார். மேலும், இந்த படத்தில் இளவயது ராஜ்கிரணாகவும் அவர் நடித்திருந்தார்.

இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றாலும், அதன் பின்னர் இயக்கத்தை கைவிட்டு மீண்டும் நடிக்கும் பணியில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு ஜனவரியில் இயக்குனராக மற்றொரு படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியது.

மேலும், இந்த படத்தில் அவரே கதாநாயகனாகவும் நடிப்பார் என அறிவிக்கப்பட்டது. அமலா பால், அபர்ணா பாலமுரளி மற்றும் துஷாரா விஜயன் என மூன்று கதாநாயகிகளும், தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் உள்ளிட்ட பல பிரபல நடிகர்களும் இந்த படத்தில் இடம்பெற்றனர்.

இது தனுஷின் 50வது படம் என்பதால் ரசிகர்கள் இந்த படத்தை மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்தாலும், படத்தின் படப்பிடிப்புகள் ஜூலையிலேயே தொடங்கின. கேப்டன் மில்லர் படத்திலும் நடித்து வந்த தனுஷ், அந்த படத்திற்கு மத்தியிலும் நேரம் ஒதுக்கி இந்த படத்தை இயக்கம் வேலையிலும் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், தற்போது படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் புரடக்ஷன் பணிகள் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை என்றாலும், ராயன் என பெயர் வைக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும், படத்தின் அனைத்து பணிகளையும் முடித்து வரும் ஏப்ரல் 11 அன்று படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கடின இலக்கை கொடுக்குமா கொல்கத்தா - டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச முடிவு..!!

More in Cinema News

To Top