Connect with us

அப்சரா ரெட்டிக்கு 50 லட்சம் நஷ்ட ஈடு – பிரபல யூடியூபருக்கு ஆப்படித்த நீதிமன்றம்..!!

Cinema News

அப்சரா ரெட்டிக்கு 50 லட்சம் நஷ்ட ஈடு – பிரபல யூடியூபருக்கு ஆப்படித்த நீதிமன்றம்..!!

பிரபல யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீனுக்கு எதிராக அப்சரா தொடுத்த வழக்கில் அவருக்கு இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது .

தமிழ்நாட்டின் இரு பெரும் அரசியல் கட்சிகளில் ஒன்றாக இருப்பது அதிமுக . இக்கட்சியில் செய்தி தொடர்பாளராமாக இருப்பவர் தான் திருநங்கை அப்சரா ரெட்டி .

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருந்து வரும் தன் மீது தேவையின்றி யூடியூப் தளத்தில் தொடர்ந்து அவதூறுகள் பரப்பியதாக பிரபல யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீன் மீது அப்சரா ரெட்டி வழக்கு தொடர்ந்திருந்தார்.

யூடியூபர் ஜோவின் இந்த அவதூறு கருத்துகளால் தனக்கு பல நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது என்று அப்சரா ரெட்டி புகார் தெரிவித்த நிலையில் அவருக்கு எதிரான வீடியோக்களை யூடியூபில் இருந்து கூகுள் நிறுவனம் நீக்கியது .

இந்நிலையில் இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் யூடியூபில் கருத்துகளை வெளியிட உரிமை உள்ளது என்றாலும் தனிப்பட்ட நபரின் உரிமையில் தலையிடக்கூடாது என ஜோ மைக்கிளுக்கு அறிவுரை கூறினார் .

இதையடுத்து பாதிக்கப்பட்ட திருநங்கை அப்சரா ரெட்டிக்கு யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீன் ரூ. 50 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தமிழக அரசின் அறிக்கையால் பாதிப்புக்குள்ளாகும் மலைவாழ் மக்கள் - தினகரன் வேதனை
Continue Reading
Advertisement
You may also like...

More in Cinema News

To Top