Connect with us

ஜார்க்கண்ட் மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் 12 பேர் பலி..!!

Featured

ஜார்க்கண்ட் மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் 12 பேர் பலி..!!

ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாராவில் உள்ள கலாஜாரியா ரயில் நிலையம் அருகே 12 பேர் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து மாவட்ட அதிகாரி அனந்த் குமார் கொடுத்துள்ள விளக்கத்தில் கூறிருபதவாது :

ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாராவில் உள்ள கலாஜாரியா ரயில் நிலையம் அருகே 12 பேர் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது

உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் ரயில்வே காவல்துறையினர் முதற்கட்டமாக தெரிவித்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணையை தொடங்கி உள்ளோம்.

இந்த கோர ரயில் விபத்தில் பலியானவர்களில் இதுவரை 2 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கலாஜாரியா ரயில்வே கிராசிங் அருகே, ரயில் நிறுத்தப்பட்டபோது சில பயணிகள் கீழே இறங்கினர், அப்போது மற்றொரு ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாகக் ரயில் நிலையத்தில் இருந்தவர்கள் கூறுகின்றனர். .

RPF மற்றும் மாவட்ட காவல்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர், விபத்துக்கான முழு காரணம் இன்னும் சில மணி நேரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.


மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சேப்பாக்கத்தில் CSK அணிக்கு எதிராக டாஸ் வென்ற SRH பந்துவீச முடிவு - கடின இலக்கை கொடுக்குமா CSK..?

More in Featured

To Top