Connect with us

பேட்டிங்கில் மிரட்டுமா டெல்லி..? டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச முடிவு..!!

Featured

பேட்டிங்கில் மிரட்டுமா டெல்லி..? டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச முடிவு..!!

பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள IPL கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டெல்லி அணிக்கு எதிராக பந்துவீச முடிவு செய்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் டெல்லியில் உள்ள உலக புகழ் பெற்ற அருண் ஜெட்லீ கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் தொடரின் 56 ஆவது லீக் போட்டியில் DC – RR அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளார். இதையடுத்து ராஜஸ்தான் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்து கடின இலக்கை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் டெல்லி அணி பேட்டிங் செய்ய உள்ளது.

நடப்பு தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடி உள்ள பேட் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 போட்டியில் வெற்றி பெற்று 2 போட்டியில் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் தற்போது 2 ஆவது இடத்தில் உள்ளது.

இதேபோல் இந்த பக்கம் நடப்பு தொடரில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடி உள்ள ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணி 5 போட்டியில் வெற்றி பெற்று 6 போட்டியில் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் தற்போது 6 ஆவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லீ கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பூர்வக்குடி மக்கள் - ஓபிஎஸ் கடும் கண்டனம்

More in Featured

To Top