Connect with us

தென்மாவட்ட கல்லூரி மாணவர்களே இந்த செய்தி உங்களுக்காக தான் – தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

Featured

தென்மாவட்ட கல்லூரி மாணவர்களே இந்த செய்தி உங்களுக்காக தான் – தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

தென்மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத கனமழையால் சான்றிதழ்களை இழந்த கல்லூரி மாணவர்களுக்காக தமிழ்நாடு அரசு தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

கனமழை பாதிப்பால் கல்லூரி சான்றிதழ்களை இழந்த நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட மாணவ, மாணவிகள் கட்டணமின்றி சான்றிதழ் நகல்களை பெறலாம் என தமிழ்நாடு அரசின் உத்தரவின் பேரில் தமிழக உயர்கல்வித்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஏற்பட்ட புயல் வெள்ள பாதிப்பால் இழந்த சான்றிதழ்களை பெற http://mycertificates.com என்ற இணையதளம் உருவாக்கப்பட்டது. அதே இணையதளத்தில் தென்மாவட்ட கல்லூரி மாணவர்கள் தங்களது விவரங்களை பதிவு செய்து நகல்களை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மேலும் விவரங்களை அறிவிய வேண்டும் என்றால் தங்களது கல்லூரிகளை அணுகி இதுகுறித்த தகவலை பெற்றுக்கொள்ளலாம் என்றும் மேலே குறிப்பிட்டுள்ள இணையதளத்தின் மூலமாகவும் தங்களது சந்தேகங்களை பூர்த்தி செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விஜயகுமாரின் அடுத்த புரட்சி - வெளியானது எலக்சன் படத்தின் ட்ரைலர்..!!

More in Featured

To Top