Connect with us

தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மின் ஊழியரின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

Featured

தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மின் ஊழியரின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார் .

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வட்டம், தூத்துக்குடி பகுதி – 1 கிராமம், அம்பேத்கார் நகர் மூன்றாவது தெருவைச் சேர்ந்த முருகன் என்பவர் (24.12.2023) அன்று கனமழையினால் சேதமடைந்த கிருஷ்ணராஜபுரம், ஐந்தாவது தெருவில் உள்ள மின்கம்பத்தினை பழுதுபார்த்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ படத்தின் அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்..!!!

More in Featured

To Top