Connect with us

முக்கியமான பதவியில் இருந்து ராஜினாமா செய்த திருப்பூர் சுப்ரமணியம்..இனி Open statement தரமாட்டாரு!

Cinema News

முக்கியமான பதவியில் இருந்து ராஜினாமா செய்த திருப்பூர் சுப்ரமணியம்..இனி Open statement தரமாட்டாரு!

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் திருப்பூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளார்கள் சங்கம் தலைவர் பொறுப்பில் இருந்தவர் மா.சுப்பிரமணியம்…இவரை தமிழ் சினிமா ரசிகர்கள் நன்கு அறிவர் அப்படி ஒரு இடத்தில் தான் இவர் இருக்கின்றார்,இவரை திருப்பூர் சுப்பிரமணியம் என்றே திரையுலகினர் அழைப்பது வழக்கம்…பல படங்களின் வசூலை சொல்லி ரசிகர்களிடம் சண்டை போடுவார்..

இவர் சக்தி சினிமாஸ் என்கிற திரையரங்கையும் நடத்தி வருகிறார் அதில் பல படங்கள் காலை அனுமதி இன்றி வாங்கி ரிலீஸ் செய்ததாக பிரச்சனைகள் போனது…தீபாவளியை முன்னிட்டு அரசாணையை மீறி டைகர் 3 படத்தை காலை 7 மணிக்கு திரையிட்தாக இவர் மீது குற்றச்சாட்டு அதிகமாக இருந்து வருகின்றது..

ஆன்லைன் புக்கிங் செய்யப்பட்டதற்கான ஸ்கிரீன் ஷார்ட்ஸ் சில வெளியானது எனவே இதுகுறித்து விளக்கம் கேட்டு மாவட்ட நிர்வாகம் தரப்பில் இருந்து அவருக்கு நோட்டீஸ் அனுப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது…அதுவே இவரின் பதவிக்கு ஆப்பு என்று சொல்லலாம்…

அவர் விளக்கும் கொடுப்பதை வைத்தே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சுப்பிரமணியன் அதிரடியாக தன்னுடைய தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது எனது சொந்த வேலை காரணமாக நமது சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன்…என சொல்லி இருக்கின்றார்,இவர் சொல்லியது இப்போது வைரல் ஆகி வருகின்றது..பலரும் இது தேவைதான் என விமர்சித்தும் வருகின்றனர்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திடீரென வெளிநாடு சென்ற ரஜினிகாந்த் - என்ன மேட்டர் தெரியுமா..?

More in Cinema News

To Top