Connect with us

இதுதான் செல்லம்மா திட்றதா : ‘கண்டனம்’ என்ற வார்த்தை இன்றி பிரதமர் மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த EPS..!!!

Featured

இதுதான் செல்லம்மா திட்றதா : ‘கண்டனம்’ என்ற வார்த்தை இன்றி பிரதமர் மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த EPS..!!!

கடந்த இரு நாட்களாக தேத்தல் பரப்புரைகளில் பிரதமர் மோடி பேசிய சில சர்ச்சையான கருத்துக்களுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் என்ற வார்த்தையே இல்லாமல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து EPS வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

பாரதப் பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்கள் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும். வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும், நாட்டின் உயர் ஆட்சிப் பதவியில் உள்ள பாரதப் பிரதமரும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல.

இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல. அரசியல் கட்சித் தலைவர்களும், ஆட்சி அதிகாரத்தில் மாண்பைமிகு உயர் பதவியில் உள்ளவர்களும் இதுபோன்ற கருத்துகளைத் தவிர்ப்பது நாட்டின் நலனுக்கும், மத நல்லிணக்கத்திற்கும் நல்லது.

அரசியல் கட்சித் தலைவர்களின் இதுபோன்ற சர்ச்சை கருத்துகளால் சிறுபான்மையின மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், மத உணர்வுகளைத் தூண்டும் விதமாகவும் அமைகிறது.

தேர்தல் பிரச்சாரத்திற்காக கண்ணியம் தவறிய இதுபோன்ற மத துவேச கருத்துகளை யார் பேசினாலும் அது, இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். நாட்டின் நலனுக்காக இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சேப்பாக்கத்தில் CSK அணிக்கு எதிராக டாஸ் வென்ற SRH பந்துவீச முடிவு - கடின இலக்கை கொடுக்குமா CSK..?

More in Featured

To Top