Connect with us

நடிகர் தனுஷ் மீது போடப்பட்ட வழக்கு – அதிரடி தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம்..!!

Cinema News

நடிகர் தனுஷ் மீது போடப்பட்ட வழக்கு – அதிரடி தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம்..!!

கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் மீது போடப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

இந்திய சினிமாவில் இருக்கும் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் . இந்திய சினிமாவில் மட்டுமல்லாமல் ஹாலிவுட் சினிமாவிலும் கால் பதித்து அங்கேயும் நல்ல நடிகர் என்ற பெயரையும் புகழையும் பெற்றுள்ளார் .

திரையுலகில் ஹீரோவாக கலக்கி வரும் இவர் தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்று உள்ளார் . நடிப்பில் தற்போது முழு கவனம் செலுத்தி வரும் நடிகர் தனுஷின் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் திரையரங்குகளில் தற்போது சக்கை போடு போட்டு வருகிறது.

இந்நினையில் நடிகர் தனுஷ் மீது கடந்த 2014 ஆம் ஆண்டு போடப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

குளோபல் ஸ்டார் தனுஷ் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான படம், ‘வேலையில்லா பட்டதாரி’. ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கிய இந்தப் படத்தில் அமலா பால், சுரபி, சரண்யா, சமுத்திரக்கனி, விவேக் உட்பட பலர் நடித்திருந்தனர்.

ராக் ஸ்டார் அனிருத் இசை அமைத்த இப்படம் தமிழில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது . அதேபோல் இப்படம் தெலுங்கில் ‘ரகுவரன் பி.டெக்’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியானது.

அப்படத்தில் தனுஷ் சிகரெட் பிடிக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது . ஆனால், புகை பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்ற வாகசம் அதில் இடம்பெறவில்லை.

இது தொடர்பாக நடிகர் தனுஷ் மீது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு போடப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு சரியே, இதில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என கருது தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  என் திருமணத்தை பார்க்க உங்களுக்கு அவ்ளோ அவசரமா - நடிகை மாளவிகா மோகனன் செம கலாய்..!!

More in Cinema News

To Top