Connect with us

வளர்ப்பு நாயை கொன்ற தெரு நாய்கள் – பழிக்கு பலி வாங்கிய வளர்ப்பு நாயின் உரிமையாளர்..!!

Featured

வளர்ப்பு நாயை கொன்ற தெரு நாய்கள் – பழிக்கு பலி வாங்கிய வளர்ப்பு நாயின் உரிமையாளர்..!!

ஆசை ஆசையை வளர்த்த தனது வளர்ப்பு நாயை சுத்து போட்டு கொன்ற தெரு நாய்களை வளர்ப்பு நாயின் உரிமையாளர் துரத்தி துரத்தி கொன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த நரசிம்ம ரெட்டி, தனது மாமியார் வீடு இருக்கும் கிராமத்திற்குச் சென்றபோது அங்குள்ள தெரு நாய்கள், தனது இரு வளர்ப்பு நாய்களை கடித்து கொன்றுள்ளது.

தெரு நாய்களின் இந்த கொடூர தாக்குதலால் தான் ஆசை ஆசையை வளர்த்த வளர்ப்பு நாய் உயிரிழந்தது நரசிம்ம ரெட்டியை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது .

இதனால் கடும் ஆத்திரமடைந்த நரசிம்ம ரெட்டி தனது நண்பர்கள் உதவியுடன் 20 தெரு நாய்களை துரத்தி துரத்தி சுட்டுக்கொன்றுள்ளார்

தனது வளர்ப்பு நாயை தெரு நாய்கள் கடித்துக் கொன்றதால், ஆத்திரத்தில் நண்பர்கள் உதவியுடன் நள்ளிரவில் பென்ஸ் காரில் வந்து துப்பாக்கியால் சுட்டு 20 தெரு நாய்களைக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர் .

இதையடுத்து அங்குள்ள CCTV கேமராக்களை சோதனை செய்ததில் நரசிம்ம ரெட்டி ,மற்றும் அவரது நண்பர்கள் தான் இந்த கொடூர செயலை செய்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது . இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  டெல்லியை வச்சு செய்த கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி..!!

More in Featured

To Top