Connect with us

மிக்ஜாம் புயல் பாதிப்பு: முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 10 லட்சம் வழங்கினார் நடிகர் சிவகார்த்திகேயன்..!!

Cinema News

மிக்ஜாம் புயல் பாதிப்பு: முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 10 லட்சம் வழங்கினார் நடிகர் சிவகார்த்திகேயன்..!!

​​​​​​மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய பாதிப்புகளால் கடும் அவதிக்குள்ளான மக்களுக்கு உதவிடும் வகையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது . இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது படிப்படியாக மின் விநியோகம் நடைபெற்று வருகிறது. இருப்பினும் இன்னும் சில பகுதிகளில் வெள்ளம் வடியாமலே இருப்பதால் அப்பகுதி மக்களுக்கு அத்தியாவசிய தேவைகள் கூட கிடைக்காமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை காக்கவும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யம் திரை பிரபலங்கள் பலர் களத்தில் இறங்கியுள்ள நிலையில் பல உச்ச நட்சத்திரங்கள் தங்களால் முடிந்த தொகையினை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கி வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது ​​​​​மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய பாதிப்புகளால் கடும் அவதிக்குள்ளான மக்களுக்கு உதவிடும் வகையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

நடிகரும் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களை இன்று நேரில் சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயனின் இந்த செயலை பாராட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும் - அசுர பலம் கொண்ட ஹைதராபாத்தை அசால்டாக வீழ்த்தியது சென்னை அணி..!!

More in Cinema News

To Top