Connect with us

மருத்துவ காரணங்களை சொல்லி ஜாமீன் வாங்க முடியாது..செந்தில் பாலாஜிக்கு மீண்டும் சிக்கல்!

Politics

மருத்துவ காரணங்களை சொல்லி ஜாமீன் வாங்க முடியாது..செந்தில் பாலாஜிக்கு மீண்டும் சிக்கல்!

அமைச்சர் செந்தில் பாலாஜி பற்றிய தகவல்கள் நாம் அனைவருமே அறிந்திருப்போம் அதன்படி,இப்போது நீதிமன்ற காவலில் சிறையில் இருந்து வருகிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி..இதற்கிடையே கடந்த 22ஆம் தேதியுடன் அவரது நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில் அவர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 22ஆம் தேதி ஆஜர்படுத்தபட்டார்…அப்போது அவருக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்று பார்த்தால் அப்படியே மாறியது…

11 ஆவது முறையாக அவருடைய நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டு வரும் December-4 வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்…அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவைச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இரு முறை தள்ளுபடி செய்த நிலையில் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது…

அதாவது உடல்நிலை காரணமாக ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் கூறப்பட்ட நிலையில் அது (அக்டோபர் 19) ரத்து செய்யப்பட்டது….இப்போது உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடை செய்து இருக்கின்றார் செந்தில் பாலாஜி….

அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது அதாவது அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலையை மருத்துவ பரிசோதனை செய்து அறிக்கையாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்….இந்தச் சூழலில் செந்தில் பாலாஜியின் மருத்துவ பரிசோதனை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது…

அதனை சமர்ப்பித்து ஜாமீன் கேட்கப்பட்டிருந்தது,அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் மருத்துவ பரிசோதனை செய்துவிட்டது மருத்துவ அறிக்கையில் தீவிர பாதிப்பால் உடனடி சிகிச்சை தேவை என எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றனர்….மேலும் மருத்துவ காரணங்களுக்காகச் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க முடியாது அவை அனைத்தையும் ஏற்றுகொள்ளவே முடியாது என சொல்லி இருக்கின்றனர்..அதனால் இம்முறையும் அவருக்கு ஜாமீன் இல்லாதது தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  2 ரன்னில் சதத்தை தவறவிட்ட ருதுராஜ் - ஹைதராபாத் அணிக்கு 213 ரன்கள் இலக்கு..!!

More in Politics

To Top