Connect with us

மன்னிப்பு கேட்கவேண்டும்..ஓட்டு கேட்டப்ப அந்த மக்கள் உங்களுக்கு வேணும் இப்போ திமிரா??Congress தரப்பில் குஷ்புவை எதிர்த்து போராட்டம்!

Politics

மன்னிப்பு கேட்கவேண்டும்..ஓட்டு கேட்டப்ப அந்த மக்கள் உங்களுக்கு வேணும் இப்போ திமிரா??Congress தரப்பில் குஷ்புவை எதிர்த்து போராட்டம்!

நடிகை குஷ்பு இப்போது அதிகம் பேசப்படும் ஒரு ஆளாகவே மாறிவிட்டார்,சேரி மொழி என விமர்சனம் செய்த நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்புவிற்கு எதிராக நாளை போராட்டம் நடத்த இருப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது…இதற்காக பல முன் எச்சரிக்கைகளுடன் குஷ்புவின் side இருக்கின்றனர்..

இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி.துறை தலைவர் ரஞ்சன் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், குஷ்புவின் டிவிட்டர் பதிவுக்கு ஒரு நபரின் பதிலை விமர்சன ரீதியாக எதிர் கொள்ள முடியாமல் எனக்கு உன்னை மாதிரி சேரி மொழி பேச தெரியாது என்று பொது வெளியில் பேசிட்டு….வருத்தம் தெரிவிக்க சொன்னா முடியாது வேளச்சேரி இல்லையா செம்மஞ்சேரி இல்லையா முடிந்தா வா அப்படி தான் பேசுவேன் என்று ஆணவத்தில் பேசி கொண்டு இருக்கிறார்…இது எந்த விதத்தில் நியாயம்..பேசுவதெல்லாம் பேசிவிட்டு கடைசியில் இப்படி மழுப்பி எதுவும் ஆகாது..

சேரியிலிருந்து பல ஜனாதிபதிகளும்,முதல்வர்களும் ஏன் நாடாளுமன்றத்தை வழிநடத்தும் சபாநாயகர்களும், சட்டம் இயற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்று பல ஆளுமைகள் உருவான பிறகும் அந்த பகுதிக்குனு ஒரு அடையாளம் அந்த மக்களுக்கு என்று ஒரு அடையாளம் அந்த மொழி நம்ம பேசுற மொழி இல்லை அது கேவலம் என்பது போல சித்தரிப்பது நியாயம் தானா?

கடந்த சட்டமன்ற தேர்தலில் குஷ்பு போட்டியிட்ட ஆயிரம் விளக்கு தொகுதி குஷ்பு குறிப்பிட்ட சமூக மக்கள் 30 சதவிகிதம் வாழும் பகுதி.ஒட்டுக்காக அவர்களை கட்டிபிடித்து அவங்க வீட்டு தண்ணீரை குடித்த குஷ்புக்கு அவங்க மொழி மட்டும் இப்ப அருவெறுப்பாக தெரிகிறதா..அவர்களிடம் இருந்து ஓட்டு மட்டும் தேவை அவர்கள் தகாதவர்கள் அப்படி தான…?சக மனிதனை சமமாக நடத்தும் மனநிலைக்கு பெரும்பகுதி மக்கள் மாறி வரும் தற்போதைய நிலையில் அந்த அடையாளத்தை வைத்து மீண்டும் அடிக்கலாமா??

எவ்வளவு சமூக முன்னேற்றமும் பொருளாதார தன்னிறைவு அடைந்தாலும் அந்த மக்களை என்றும் பொது சமூகத்தில் இருந்து அடையாளபடுத்தி விலக்கி தான் பார்ப்பேன் என்று பேசும் குஷ்புக்கள் இந்த நாட்டில் இருப்பதற்கு தகுதி இல்லை…உங்களிடம் மன்னிப்பும் வேண்டும்..இப்படி அருவருக்கத்தக்க பேச்சை பேசியது தவறு என சொல்லி இருக்கின்றார்.ரஞ்சன்,அதனை போல நாளை (27.11.23) போராட்டம் உறுதி என சொல்லி இருக்கின்றார்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  காதலும் கலவரமும் கலந்த அர்ஜுன் தாஸின் ‘ரசவாதி’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!!

More in Politics

To Top