Connect with us

என் கட்சிக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனே கைது செய்திடுக – கொதித்தெழுந்த சீமான்

Featured

என் கட்சிக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனே கைது செய்திடுக – கொதித்தெழுந்த சீமான்

கோவை கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி மாநகராட்சியின் செயலாளர் பிரதீப் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என நாம் தமிழர் கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சீமான் விடுத்துள்ள கண்டன செய்தியில் கூறிருப்பதாவது :

“கோவை மாவட்டம், கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி, 97வது மாநகராட்சியின் செயலாளர் அன்புத்தம்பி பிரதீப் அவர்கள் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட வன்முறைக்கும்பல் தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாது, கொடுந்தாக்குதல்கள் மூலம் முடக்க நினையும் வன்முறையாளர்களின் இக்கொலைவெறிச்செயல்களை எதன்பொருட்டும் அனுமதிக்க முடியாது.

ஆகவே, இவ்விவகாரத்தில் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து வன்முறையை ஏவிய சமூக விரோதிகளை உடனடியாகக் கைதுசெய்து சிறையில் அடைக்க வேண்டும் .

கோவையில் தொடர்ந்து வரும் இத்தகைய வன்முறை வெறியாட்டங்களைத் தடுத்து நிறுத்தாவிட்டால், நாம் தமிழர் கட்சி உரிய எதிர்வினையாற்றுமெனவும் தமிழக அரசை எச்சரிக்கிறேன் என சீமான் விடுத்துள்ள கண்டன செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் உருவான ‘PT சார்’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!!

More in Featured

To Top