Connect with us

ஓட்டுக்கு காசு கொடுக்க வருபவனை கட்டி வைத்து உதைக்க வேண்டும் – சீமான் ஆவேசம்..!!!

Featured

ஓட்டுக்கு காசு கொடுக்க வருபவனை கட்டி வைத்து உதைக்க வேண்டும் – சீமான் ஆவேசம்..!!!

ஓட்டுக்கு காசு கொடுக்க வருபவனை கட்டி வைத்து உதைக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் இன்று தீவிர பரப்புரையில் ஈடுபட்ட சீமான் அங்கு கூடிருந்த மக்களிடம் எழுச்சியுரையாற்றினார் அப்போது அவர் பேசியதாவது :

பழைய கை, பழைய தாமரை, பழைய சூரியன விட்டுடுங்க; மைக் புதியது; ப்ளீஸ் யூஸ் மைக் .

ஓட்டுக்கு காசு கொடுக்க வருபவனை கட்டி வைத்து உதைக்க வேண்டும் அவனது ரத்தம் சிந்தினால் நாடு தூய்மையாகும்.

செஸ் ஒலிம்பியாட், கேலோ இந்தியா போட்டிக்கு பிரதமரை வரவேற்றதே முதல்வரும், அவரது மகனும்தான் . உதயநிதியை தவிர எந்த மாநில விளையாட்டுத்துறை அமைச்சரை பிரதமர் மோடி சந்தித்துள்ளார்?

அண்ணாமலை ஜெயிப்பதற்காக கோவையில் திமுக டம்மி வேட்பாளரை நிறுத்தியுள்ளது கனிமொழி ஜெயிப்பதற்காக தமிழ் மாநில காங்கிரஸுக்கு தூத்துக்குடியை ஒதுக்கியுள்ளது பாஜக

பத்திரிகையாளர் கேட்கும் கேள்விக்கு பிரதமர் நரேந்திர மோடியிடம் பதில் இல்லை;
10 ஆண்டுகளில் ஒருமுறையாவது பிரதமர் மோடி பத்திரிகையாளரை சந்தித்தது உண்டா?

தன்னை காமராஜர் என்று சொல்லும் ரங்கசாமி நேர் எதிரானவரிடம் கட்சியை அடமானம் வைத்துவிட்டார் என சீமான் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை தேவை - அன்புமணி வலியுறுத்தல்

More in Featured

To Top