Connect with us

தலைவர் வாழ்த்துக்களை பெற்றதில் மகிழ்ச்சி..சந்தோஷ் நாராயணன் புகழாரம்!

Cinema News

தலைவர் வாழ்த்துக்களை பெற்றதில் மகிழ்ச்சி..சந்தோஷ் நாராயணன் புகழாரம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஆகச்சிறந்த படமாக இருக்கின்றது என்று சொல்லலாம்…இதனை தலைவர் கூட நேற்று பாராட்டி ஒரு பதிவை போட்டு இருந்தார்…

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த் , பாபி சிம்ஹா ,லட்சுமி மேனன் நடிப்பில் உருவான ஜிகர்தண்டா திரைப்படம் மிகவும் பெரிய பிளாக் பஸ்டர் வெற்றியை பெற்றது..

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகமான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 10 ஆம் தேதி திரையரங்குகளில் கோலாகலமாக வெளியானது…வெளியான முதலே சிறந்த வசூலை பெற்று வந்தது…

படத்திற்கும் நல்ல அங்கீகாரம் கிடைத்தது…படம் வெளியாகி ரசிகர்களிடையேயும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது…பலரும் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர்…

படத்தை படக்குழுவையும் நேரில் வாழ்த்தினார் தலைவர் ரஜினிகாந்த் அவர்கள்..அதனை தொடர்ந்து இப்போது சந்தோஷ் நாராயணன் ஒரு ட்வீட் போட்டுள்ளார் அதில் எல்லோரும் வியந்து நோக்கும் ஒருவரிடம் இருந்து மனமார்ந்த பாராட்டுப் பெறுவது என்பது கிடைத்தற்கரிய பேறு. எமது அருமைத் ‘தலைவர்’, சூப்பர் ஸ்டாரிடம் இருந்து இன்று நாம் அப்பேற்றைப் பெற்று அகமகிழ்ந்து உளம் நெகிழ்ந்து நிற்கிறோம். இப்பாராட்டு எம்மை மேன்மேலும் கடினமாக உழைக்கவும் இன்னும் சிறந்த படைப்புகளை உருவாக்கவும் உந்துதலாகவும் உறுதுணையாகவும் நிற்கின்றது.

சொல்லப் போதுமான வார்த்தைகள் இல்லை, எனினும் சுருக்கமாகவும் உருக்கமாகவும் சொல்கிறோம், “நன்றிகள் கோடி எங்கள் தலைவரே” என பாசமாக போட்ட ட்வீட் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தும் அரண்மனை 4 - இதுவரை எவ்ளோ வசூல் தெரியுமா..?

More in Cinema News

To Top