Connect with us

இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணி பந்து வீச முடிவு..!! பேட்டிங்கில் அதிரடி காட்டுமா இந்திய அணி..?

Featured

இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணி பந்து வீச முடிவு..!! பேட்டிங்கில் அதிரடி காட்டுமா இந்திய அணி..?

இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடயிலான 3 வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்ரிக்கா அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.

தென்னாப்பிரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விறுவிறுப்பாக விளையாடி வருகிறது .

இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கடந்த 17 ஆம் தேதி அன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்ரிக்கா அணியை வீழ்த்தியது.

இதையடுத்து கடந்த 19 ஆம் தேதி அன்று நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடிய தென்னாப்ரிக்கா அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.

இந்நிலையில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான கடைசி மற்றும் 3ஆவது ஒருநாள் போட்டி உலக புகழ் பெற்ற போலண்ட் பார்க் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது . இந்த போட்டியில் இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.

இதையடுத்து தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் தற்போது களத்தில் விளையாடி வருகின்றனர்.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் உள்ளதால் இன்று நடைபெறும் போட்டியில் தொடரை வெல்ல இரு அணிகளும் முழு திறனையும் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை வெல்லுமா இல்லையா என்பதை நாம் காத்திருந்தது பார்க்கலாம் .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவிப்பு..!!

More in Featured

To Top