Connect with us

பேட்டிங்கில் மிரளவைத்த ரிஷப் பண்ட் – சென்னை அணிக்கு 192 ரன்கள் இலக்கு..!!!

Featured

பேட்டிங்கில் மிரளவைத்த ரிஷப் பண்ட் – சென்னை அணிக்கு 192 ரன்கள் இலக்கு..!!!

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி சென்னை அணிக்கு 192 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் டெல்லியில் உள்ள பிரபல கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் சிறப்பான தரமான போட்டியில் CSK – DC அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டியில் சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் பிரித்வி ஷா களமிறங்கினர் .

ஆரம்பம் முதல் அதிரடி காட்டிய இருவரும் சென்னை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தது . சிறப்பாக விளையாடிய வார்னர், 52 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து களத்திற்கு வந்த கேப்டன் ரிஷப் பந்த் ஆரம்பம் முதல் அதிரடியை காட்டி வந்தார் . மறுபுறம் பொறுப்புடன் ஆடி வந்த பிரித்வி ஷா 43 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்த பக்கம் சென்னை பந்துவீச்சை துவம்சம் செய்த பண்ட் 51 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார் . இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்புக்கு டெல்லி அணி 191 ரன்கள் எடுத்தது .

இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சூப்பர் ஸ்டார் படத்தில் கேமியோ ரோலில் களமிறங்கும் மக்களின் மனம் கவர்ந்த பிரபலம் - யார் தெரியுமா..?

More in Featured

To Top