Connect with us

சென்னையில் திருடுபோன பொருட்கள் மீட்பு – உரிமையாளர்களிடம் ஒப்படைத்த மாநகர காவல்துறை

Featured

சென்னையில் திருடுபோன பொருட்கள் மீட்பு – உரிமையாளர்களிடம் ஒப்படைத்த மாநகர காவல்துறை

சென்னையில் கண்ட ஆண்டு திருடப்பட்டு, பின்னர் காவல்துறையால் மீட்கப்பட்ட பொருட்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது .

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் நாளுக்கு நாள் எத்தனை சிறப்பான சம்பவங்கள் நடக்கிறதோ அதனை ஈடுகட்டும் வகையில் பல குற்ற சம்பவங்களும் நடந்தேறி வருகிறது.

இப்படியான குற்ற சம்பவங்களை தடுக்க நம்ப காவல்துறையும் அவர்களால் முடிந்த அளவு துடிப்புடன் இரும்புக்கரம் கொண்டு அடக்கி வருகிறது.

அந்தவகையில் சென்னையில் கடந்த 2023ம் ஆண்டு திருடப்பட்டு, பின்னர் காவல்துறையால் மீட்கப்பட்ட பொருட்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில் இன்று நடைபெற்றது

இதில் 19.21 கோடி மதிப்புள்ள 3,337 சவரன் தங்க நகைகள், 50 கிலோ வெள்ளிப் பொருட்கள், 3.61 கோடி ரொக்கம், 798 செல்ஃபோன்கள், 411 இருசக்கர வாகனகள், 28 ஆட்டோக்கள், 15 இலகு ரக வாகனங்கள் உள்ளிட்டவை அவற்றின் உரிமையாளர்களிடம் போலீசாரால் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நடிகை சாந்தினி ஷார்ட் உடையில் Glamour போட்டோஷூட்..

More in Featured

To Top