Connect with us

6 மாத குழந்தையை கடித்து குதறிய எலிகள் – தந்தைக்கு கடுமையான தண்டனை விதித்த நீதிமன்றம்..!!

Featured

6 மாத குழந்தையை கடித்து குதறிய எலிகள் – தந்தைக்கு கடுமையான தண்டனை விதித்த நீதிமன்றம்..!!

அமெரிக்காவில் 6 மாத குழந்தையை எலிகள் கடித்து குதறியதாக எழுந்த புகாரில் குழந்தையை சரியாக பராமரிக்காத தந்தைக்கு அந்நாட்டு நீதி மன்றம் கடுமையான தண்டனை வழங்கியுள்ளது.

அமெரிக்காவில் கடந்த 2023 செப்டம்பரில் டேவிட் என்பவரின் 6 மாத குழந்தையை, 50க்கும் மேற்பட்ட இடங்களில் எலிகள் கொடூரமாக கடித்து குதறி உள்ளது.

இதையடுத்து இச்சம்பம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்ட நிலையில் குழந்தையை சரியாக பராமரிக்காதது, எலிகளை அகற்றாமல் குழந்தைக்கு தீங்கு விளைவித்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக தற்போது அந்நாட்டு நீதி மன்றம் குழந்தையின் தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

6 மாத குழந்தையை 50க்கும் மேற்பட்ட இடங்களில் எலிகள் கடித்து குதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top