Connect with us

“திருப்பதியில் சுற்றிவரும் ஜட்டி கேங் கொள்ளை கும்பல்” உஷாராக இருக்க போலீசார் எச்சரிக்கை..!!

Featured

“திருப்பதியில் சுற்றிவரும் ஜட்டி கேங் கொள்ளை கும்பல்” உஷாராக இருக்க போலீசார் எச்சரிக்கை..!!

திருப்பதியில் சுற்றிவரும் கொடூர கொள்ளை கும்பலான ஜட்டி கேங்-ன் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு பொதுமக்கள் அனைவரும் உஷாராக இருக்க வேண்டும் என போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவில் எத்தனையோ கொடூர கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ள கொடூர கொள்ளை கும்பலான ஜட்டி கேங் என்ற பெயரை கேட்டாலே அனைவரும் சற்று கதிகலங்கும் இதற்கு காரணம் அவர்கள் கொள்ளையடிக்கும் முறை தான்.

இந்த ஜட்டி கேங் எளிதில் பிடிபடாமல் இருக்க ஜட்டி மட்டும் அணிந்து கூர்மையான ஆயுதங்களைப் பயன்படுத்துவார்கள் , ஆட்கள் நடமாட்டம் குறைந்த பகுதியில் உள்ள வீடுகளை கண்காணித்து பின்னர் நள்ளிரவில் வீட்டுக்குள் சென்று சூறையாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர் . ஒரு வேலை வீட்டில் ஆட்டக்கல் இருந்தால் குறிப்பாக பெண்கள் இருந்தால் அவர்களிடம் அத்துமீறுவதியும் இந்த ஜட்டி கேங் வழக்கமாக வைத்துள்ளது.

இரவு நேரத்தில் காலிங் பெல் அடித்தாலோ, வினோத சத்தம் கேட்டாலோ, தண்ணீர் குழாய் திறந்து தண்ணீர் வெளியேற்றுவது போன்று சத்தம் கேட்டாலோ வீட்டிற்கு வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது இந்த கும்பலை தடுக்க நினைத்தாலோ அல்லது பிடிக்க நினைத்தாலோ அவர்கள் கொலை செய்யவும் தயங்க மாட்டார்கள் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எளிதில் பிடிபடாமல் இருக்க ஜட்டி மட்டும் அணிந்து கூர்மையான ஆயுதங்களைப் பயன்படுத்தும் இந்த கும்பல் கைவரிசை காட்டி வருவதால் ஆட்கள் நடமாட்டம் குறைந்த பகுதியில் உள்ள வீடுகளில் இருப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும், வெளியூர் செல்லும் பொதுமக்கள் காவல்துறையிடம் தகவல் தெரிவித்துவிட்டுச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பெங்களூரு பந்துகளை கிழித்தெடுத்த தமிழர்கள் சாய் - ஷாருக் - RCB அணிக்கு 201 ரன்கள் இலக்கு..!!!

More in Featured

To Top