Connect with us

புதுச்சேரி கடலில் பொதுமக்கள் இறங்க போலீஸ் தடை – மீறினால் சட்டம் தன் கடமையை செய்யும்..!!

Featured

புதுச்சேரி கடலில் பொதுமக்கள் இறங்க போலீஸ் தடை – மீறினால் சட்டம் தன் கடமையை செய்யும்..!!

பிறக்க இருக்கும் 2024 புத்தாண்டையொட்டி புதுச்சேரியில் எந்தக் கடற்கரைப் பகுதியிலும் கடலில் பொதுமக்கள் இறங்க காவல் துறை தடை விதித்துள்ளது.

2024 புத்தாண்டை கோலாகலமாக கொண்டாட அனைவரும் ஆவலுடன் காத்திருக்கும் காத்திருக்கும் நிலையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கவே வெளியிடப்பட்டுள்ள நிலையில் தற்போது புதுச்சேரி மக்களுக்கு மேலும் ஒரு புதிய கட்டுப்பாடே அம்மாநில கவத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி பிறக்க இருக்கும் 2024 புத்தாண்டையொட்டி புதுச்சேரியில் எந்தக் கடற்கரைப் பகுதியிலும் கடலில் பொதுமக்கள் இறங்க காவல் துறை தடை விதித்துள்ளது.

கடற்கரைப் பகுதியில் புத்தாண்டு கொண்டாடுவோர் இரவு 12.30 மணிக்குள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புத்தாண்டை கொண்டாட புதுச்சேரி கடற்கரையில் ஏராளமான பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் குவிந்து வருகின்றனர் . இதனால் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் காவல்துறையினர் 1,500 பேர் குவிக்கப்பட்டு 25 இடங்களில் உயர்கோபுரம் அமைத்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திரையரங்குகளில் வெற்றிநடைபோடும் அரண்மனை 4 - இரண்டு நாட்களில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா..?

More in Featured

To Top