Connect with us

📜❗ கதை திருட்டு புகார்: ‘பராசக்தி’ வெளியீட்டுக்கு தடை மறுப்பு

Cinema News

📜❗ கதை திருட்டு புகார்: ‘பராசக்தி’ வெளியீட்டுக்கு தடை மறுப்பு

நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படத்தின் கதை தன்னுடையது எனக் கூறி, இணை இயக்குநர் ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். இந்த படத்தின் கதைக்களம், 2010-ம் ஆண்டு தான் எழுதியதாகவும் பதிவு செய்ததாகவும் கூறப்படும் தனது கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.

இதனை தொடர்ந்து, படத்தின் வெளியீட்டுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விடுமுறை கால அமர்வில் நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் முன்பாக விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தற்போது படத்தின் வெளியீட்டுக்கு தடை விதிக்க முடியாது எனத் தெளிவுபடுத்தினார்.

ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக முழுமையான விளக்கம் பெறுவதற்காக, ‘பராசக்தி’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் பதில் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. மேலும், வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜனவரி 2-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.


மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  Drishyam3 கிளைமாக்ஸ் ரசிகர்களை அதிரவைத்ததா? இறுதியில் வந்த Twist பெரிய சர்ச்சை! 😱🔥

More in Cinema News

To Top