Connect with us

தோனியின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது – சிஎஸ்கே அணியின் புதிய கேப்டன் Ruturaj உருக்கம்..!!!

Featured

தோனியின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது – சிஎஸ்கே அணியின் புதிய கேப்டன் Ruturaj உருக்கம்..!!!

இன்றில்லை இன்னும் எதனை வருடங்கள் ஆனாலும் தோனியின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள Ruturaj உருக்கமாக தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று சென்னையில் கோலாகலமாக தொடங்க உள்ளது .

முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணியை பெங்களூரு அணி எதிர்கொள்ள உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தங்களை தீவிரமாக தயார்படுத்தி வருகின்றனர்.

13 வருடங்களாக சென்னை அணியின் கேப்டானக செயல்பட்டு வந்த தோனி நடப்பு தொடரில் தனது கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி உள்ள நிலையில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள இளம்வீரர் ருதுராஜ் தலைமையின் கீழ் சென்னை அணி முதல் முறை களம் காண உள்ளது.

இந்நிலையில் தோனி குறித்தும் அவரியின் கேப்டன்சி குறித்தும் உருக்கமாக பேசி உள்ளார் ருதுராஜ் கூறியதாவது :

சிஎஸ்கேவில் என்னை வழிநடத்த மஹி பாய், ஜடேஜா, ரஹானே போன்ற ஜாம்பவான்கள் இருக்கின்றனர். எனவே, எனக்கு பெரிதாக வருத்தப்பட எதுவுமே கிடையாது. எதிர்வரும் போட்டிகளை சந்தோஷமாக அனுபவித்து விளையாட ஆவலுடன் நான் காத்திருக்கிறேன்.

கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொள்ள தயாராக இரு’ என கடந்த ஆண்டே மஹி பாய் என்னிடம் தெரிவித்திருந்தார் . அதனால் அப்போதிலிருந்தே என்ன அதுக்காக நிறைய கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன் நெறைய உழைத்தேன்.

எத்தனை திறமையான வீரர்கள் வந்தாலும் தோனியின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என சி.எஸ்.கே. அணியின் புதிய கேப்டனான ருதுராஜ் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  RR பந்துகளை தெறிக்கவிட்ட நிதிஷ் - ராஜஸ்தான் அணிக்கு 202 ரன்கள் இலக்கு..!!!

More in Featured

To Top