Connect with us

நிதிஷின் அதிரடியால் தலைநிமிர்ந்த ஹைதராபாத் அணி – பஞ்சாப் அணிக்கு 183 ரன்கள் இலக்கு..!!!

Featured

நிதிஷின் அதிரடியால் தலைநிமிர்ந்த ஹைதராபாத் அணி – பஞ்சாப் அணிக்கு 183 ரன்கள் இலக்கு..!!!

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி பஞ்சாப் அணிக்கு 183 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் புகழ் பெற்ற மொஹாலி கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் SRH – PBKS அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச தேர்வு செய்தது .இதையடுத்து பஞ்சாப் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது .

அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் களமிறங்கினர் . இருவரும் அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுப்பார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர்.

இதையடுத்து வந்த மார்க்கரம் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க மறுபுறம் அதிரடியில் மிரட்டிய நிதிஷ் அரைசதம் கடந்து அசத்தினார் ஆனால் அவரும் 64 ரன்களில் ஆட்டமிழக்க அவரை தொடர்ந்து வந்த வீரர்களை அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினார்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் அணி 182 ரன்கள் குவித்தது. இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களத்தில் விளையாடி வருகிறது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மும்பையின் ரன்குவிப்பை முடக்குமா லக்னோ - டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச முடிவு..!!

More in Featured

To Top