Connect with us

நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிய டிஜிபிக்கு உத்தரவு போட்ட தேசிய மகளிர் ஆணையம்..!!

Cinema News

நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிய டிஜிபிக்கு உத்தரவு போட்ட தேசிய மகளிர் ஆணையம்..!!

நடிகை த்ரிஷா குறித்து ஆபாசமாக பேசிய நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிய வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் தமிழ்நாடு டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை திரிஷா உடன் நடிக்கிறேன் என்றதும், நிச்சயமாக ஒரு பெட்ரூம் சீன் இருக்கும், நடிகை குஷ்பூ, ரோஜாவை கட்டிலில் தூக்கி போட்டு நடித்ததை போல் த்ரிஷாவுடனும் அப்படி நடிக்கலாம் என்று நினைத்தேன் ஆனால் முடியாமல் போனது என மிகவும் கீழ்த்தனமாக நடிகர் மன்சூர் அலிகான் பேசியது இனையத்தில் வைரலாக நிலையில் அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

லோகேஷ் கனகராஜ் பிரபல தயாரிப்பாளர் அர்ச்சனா, பாடகி சின்மயி, சாந்தனு, மாளவிகா மோகனன், இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் உள்ளிட்டோர் தங்களுடைய எதிர்ப்புகளை தெரிவித்தனர் . மேலும் தென்னிந்திய நடிகர் சங்கமும் மன்சூர் அலிகானுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில் தற்போது நடிகை த்ரிஷா குறித்து ஆபாசமாக பேசிய குற்றத்திற்காக நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிய வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் தமிழ்நாடு டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திரையரங்குகளில் சக்கை போடு போட்ட 'மஞ்சும்மெல் பாய்ஸ்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது..!!!

More in Cinema News

To Top