Connect with us

மகன்களுடன் விரதம் இருக்கும் நயன்தாரா – எதற்கு தெரியுமா?

Featured

மகன்களுடன் விரதம் இருக்கும் நயன்தாரா – எதற்கு தெரியுமா?

நயன்தாரா, இந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடும் நாயகியாக வலம் வருகிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, ஷாருக்கானின் “ஜவான்” படத்தின் மூலம் பாலிவுட்டில் சென்று அங்கேயும் ரசிகர்களை பெற்றுள்ளார்.

அடுத்தடுத்து பிஸியான நயன்தாரா, 2020-ல் “மூக்குத்தி அம்மன்” படத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார். இதன் மூலம் “மூக்குத்தி அம்மன் 2” படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது.

இந்தப் படம், சுந்தர் சி இயக்கத்தில், ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் உருவாகிறது. நயன்தாரா அம்மனாக நடிக்கிறார். ஹிப் ஹாப் ஆதி இசையமைக்க உள்ளார். இதில் ரெஜினா, அபினயா, இனியா, யோகி பாபு, துனியா விஜய், கருடா ராம், சிங்கம் புலி போன்ற நட்சத்திரங்கள் நடிக்க உள்ளனர்.

ரூ. 100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. மேலும், “மூக்குத்தி அம்மன் 2” படத்திற்காக நயன்தாரா மற்றும் அவரது குடும்பம், ஒரு மாதமாக விரதம் இருக்கின்றனர் என்று தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மாதம்பட்டி ரங்கராஜால் பெண்கள் பலர் பாதிப்பு –ஜாய் கிரிஸில்டா அதிர்ச்சி தகவல்

More in Featured

To Top