Connect with us

என்னங்க இப்படி ஆகிருச்சு : ரோகித்துக்கு நன்றி சொல்லி வழியனுப்பிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம்..!!

Featured

என்னங்க இப்படி ஆகிருச்சு : ரோகித்துக்கு நன்றி சொல்லி வழியனுப்பிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம்..!!

2013 முதல் மும்பை அணியின் கேப்டனாக இருந்து வந்த ரோகித் ஷர்மாவின் Captainship-க்கு Good Bye சொல்லி மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் தொடராக இருந்து வருவது IPL இத்தொடர் ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை இந்த தொடருக்கு ரசிகர்கள் கொடுத்து வரும் ஆதரவை பற்றி வார்த்தைகளால் விவரிக்கமுடியாது.

ரசிகர்கள் கொண்டாடும் இந்த ப்ரீமியமான தொடரில் இதுவரை அதிகமுறை கோப்பையை வென்றுள்ள அணியாக இருந்து வருவது மும்பை இந்தியன்ஸ் அணி . கோடான கோடி ரசிகர்களை கொடுள்ள இந்த அணியின் கம்பீர கேப்டனாக இருந்து வந்தவர் ஹிட் மேன் ரோஹித் சர்மா .

இந்நிலையில் 10 வருடம் 6 முறை கோப்பைகளை ருசிபார்த்த இந்த ஹிட் மேனின் Captainship-க்கு Good Bye சொல்லியுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி . பல கோடி ருபாய் கொடுத்து ஹர்டிக் பாண்டியாவை மீண்டும் தங்கள் அணிக்கே இழுத்துள்ள மும்பை அணி தற்போது ரோஹித்தை Captainship-இல் இருந்து தள்ளிநிக்க வைத்து அந்த இடத்திற்கு ஹர்டிக் பாண்டியாவை கொண்டுவந்துள்ளது.

இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி கூறிருப்பதாவது :

“ரோகித் ஷர்மாவின் ஒப்பற்ற தலைமைக்கு நன்றி 2013 முதல் மும்பை அணியின் கேப்டனாக அவரது பங்களிப்பு அசாதாரணமானது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றியை குவித்தது மட்டுமல்லாமல், ஐபிஎல் வரலாற்றில் மிகச்சிறந்த கேப்டனாக இடம்பிடித்துள்ளார்.

அணியை மேலும் வலுப்படுத்த களத்திலும், வெளியிலும் அவரின் வழிகாட்டுதலை எதிர்பார்க்கிறோம்” என மும்பை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை தேவை - அன்புமணி வலியுறுத்தல்

More in Featured

To Top