Connect with us

சோகத்தில் ரசிகர்கள் : நடப்பு ஐபில் தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறியது மும்பை இந்தியன்ஸ்..!!

Featured

சோகத்தில் ரசிகர்கள் : நடப்பு ஐபில் தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறியது மும்பை இந்தியன்ஸ்..!!

அனல் பறக்க நடைபெற்று வரும் நடப்பு IPL கிரிக்கெட் தொடரில் இருந்து 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பிலே அப் சுற்றுக்கு தகுதி பெறாமல் முதல் அணியாக வெளியேறியுள்ளது மும்பை ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது .

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இந்த தொடரில் வழக்கம் போல் 10 சிறப்பான தரமான அணிகள் பங்கேற்றன . இதில் ஒவ்வரு அணியும் பிலே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடிந்த அனைத்தையும் செய்து வருகின்றன.

இதில் கொல்கத்தா , ராஜஸ்தான் , ஹைதராபாத் , சென்னை , டெல்லி ஆகிய அணிகள் முதல் 5 இடங்களை பிடித்துள்ளன. லக்னோ , பெங்களூரு , பஞ்சாப் , மும்பை , குஜராத் ஆகிய அணிகள் கடைசி 5 இடங்களை பிடித்துள்ளன.

இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றால் மும்பை பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளும் என்ற நிலையில் இருந்தது. ஆனால் நேற்று லக்னோ அணியை அடித்து துவைத்த ஹைதராபாத் அணி அபார வெற்றியை பெற்றது.

இதன்காரணமாக நடப்பு IPL கிரிக்கெட் தொடரில் இருந்து 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பிலே அப் சுற்றுக்கு தகுதி பெறாமல் முதல் அணியாக வெளியேறியுள்ளது .

நடப்பு தொடரில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடி உள்ள ஹர்டிக் பாண்டியா தலைமையிலான மும்பிய இந்தியன்ஸ் அணி 4 போட்டியில் வெற்றி பெற்று 8 போட்டியில் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் தற்போது 9 ஆவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அரசு கலைக்கல்லூரிகளில் சேர கடும் போட்டி - அரசுக்கு ஐடியா கொடுத்த ராமதாஸ்..!!

More in Featured

To Top