Connect with us

ஐபிஎல் தொடரின் சில போட்டிகளில் விளையாடப்போவதில்லை – மேக்ஸ்வெல் அதிரடி அறிவிப்பு

Featured

ஐபிஎல் தொடரின் சில போட்டிகளில் விளையாடப்போவதில்லை – மேக்ஸ்வெல் அதிரடி அறிவிப்பு

உடலளவிலும், மனதளவிலும் நலம் பெற வேண்டியுள்ளதால், நடப்பு ஐபிஎல் தொடரின் சில போட்டிகளில் விளையாடப்போவதில்லை என ஆர்.சி.பி. வீரர் க்ளென் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் நடப்பு தொடரிலாவது பெங்களூரு அணி கோப்பையை வெல்லுமா என அந்த அணியின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் இந்த முறையும் பெங்களூரு அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி 1 போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.

இதன்காரணமாக புள்ளிகள் பட்டியலில் பெங்களூரு அணி தற்போது கடைசி இடத்தில் உள்ளது . என்னதான் பல நட்சத்திர வீரர்களை பெங்களூரு அணி வைத்திருந்தாலும் அவர்காளால் களத்தில் எதிர்பார்த்த விளையாட்டை விளையாட முடியவில்லை என்பது மறுக்க முடியாத ஒன்று .

இப்படி இருக்கும் சூழலில் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரரான க்ளென் மேக்ஸ்வெல் நடப்பு ஐபிஎல் தொடரின் சில போட்டிகளில் விளையாடப்போவதில்லை எனஅறிவித்துள்ளார்.

உடலளவிலும், மனதளவிலும் நலம் பெற வேண்டியுள்ளதால், நடப்பு ஐபிஎல் தொடரின் சில போட்டிகளில் விளையாடப்போவதில்லை என முடிவெடுத்துள்ளேன் .

என்னால் சிறப்பாக விளையாட முடியவில்லை. எனக்கு பதிலாக வேறு யாராவது விளையாடட்டும் என ஃபாஃப் மற்றும் பயிற்சியாளர்களிடம் தெரிவித்துளேன் . உடல் மற்றும் மன நலனில் முன்னேற்றம் ஏற்பட்டு, இந்த சீசனிலேயே மீண்டும் விளையாடுவேன் என நம்புகிறேன் என் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மஞ்சுமெல் பாய்ஸ்’ பட நடிகரை கரம் பிடித்தார் நடிகை அபர்னா தாஸ்..!!!

More in Featured

To Top