Connect with us

வீம்புக்கு போட்ட வழக்கால் மன்சூர் அலிகானுக்கு விதப்பட்ட அபராதம் – அவகாசம் கேட்டு கோர்ட்டு வாசலில் மன்சூர்..!!

Cinema News

வீம்புக்கு போட்ட வழக்கால் மன்சூர் அலிகானுக்கு விதப்பட்ட அபராதம் – அவகாசம் கேட்டு கோர்ட்டு வாசலில் மன்சூர்..!!

சர்ச்சை பேச்சுக்கு பெயர் போன நடிகராக வலம் வரும் நடிகர் மன்சூர் அலிகான் தற்போது தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை செலுத்த முடியாமல் நீதிமன்றத்தை நாடியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை திரிஷா உடன் நடிக்கிறேன் என்றதும், நிச்சயமாக ஒரு பெட்ரூம் சீன் இருக்கும், நடிகை குஷ்பூ, ரோஜாவை கட்டிலில் தூக்கி போட்டு ரேப் காட்சிகளில் நடித்ததை போல் த்ரிஷாவுடனும் நடிக்கலாம் என்று நினைத்தேன் ஆனால் முடியாமல் போனது என நடிகர் மன்சூர் அலிகான் பேசியது இனையத்தில் வேகமாக பரவிய நிலையில் அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் மன்சூர் அலிகான் இச்சம்பவம் குறித்து விளக்கம் கொடுத்தார் :

நான் பேசாததை பேசியதாக கூறியதற்கும் என்னுடன் நடிக்க மாட்டேன் என்று கூறியதற்கும் நான் தான் நடிகை த்ரிஷா மீது அவதூறு வழக்கு தொடர வேண்டும் என நடிகர் மன்சூர் அலிகான் கடந்த சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தார் .

இதையடுத்து அவர் சொன்னது சொன்னபடி தன்மீது பலி போட்டவர்கள் மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடர நடிகர் மன்சூர் அலிகான் முயற்சித்தார்.

இந்நிலகையில் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக மான நஷ்ட ஈடு வழக்கு தொடர அனுமதி கோரிய நடிகர் மன்சூர் அலிகானின் வழக்கை நீதி மன்றம் தள்ளுபடி செய்து அவருக்கு ₹1 லட்சம் அபராதம் விதைத்தது.

இதனால் மனஉளைச்சலான நடிகர் மன்சூர் அலிகான் வெளியில் வராமல் சில காலம் வீட்டிலேயே இருந்ததாக கூறப்படுகிறது .

இந்நிலையில் நீதி மன்றம் விதித்த அபராத தொகையினை செலுத்த கால அவகாசம் கோரி நடிகர் மன்சூர் அலிகான் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஈடன் கார்டனில் இன்று வெற்றிநடை போடப்போவது யார்..? கொல்கத்தா - பஞ்சாப் அணிகள் இன்று மோதல்..!!

More in Cinema News

To Top