Connect with us

மீண்டெழுமா இந்திய அணி..கடைசி டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவுடன் இன்று மோதல்..!!

Featured

மீண்டெழுமா இந்திய அணி..கடைசி டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவுடன் இன்று மோதல்..!!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

தென்னாப்பிரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 டெஸ்ட்,3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் முன்னணி வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா இருவருக்கும் டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது .

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணிக்கு ரோஹித் சர்மா கேப்டனாகவும் , ஒருநாள் போட்டிகளில் விளையாடும் இந்திய அணிக்கு கே.எல். ராகுல் கேப்டனாகவும் , டி20 போட்டியில் விளையாடும் இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி கடந்த 10 ஆம் தேதி டர்பனில் நடைபெற இருந்த நிலையில் அந்த போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.இதையடுத்து நடைபெற்ற 2வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று இரவு ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறுகிறது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வெற்றியை ருசி பாக்குமா அல்லது தோல்வியை சந்திக்குமா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வந்த ‘ரிவால்வர் ரீட்டா’ படப்பிடிப்பு நிறைவு..!!

More in Featured

To Top