Connect with us

தமிழகத்தில் பாஜக ஆட்சியமைத்தால் அறநிலையத்துறை என்ற துறையே இருக்காது – ஷாக்கிங் ட்வீட் போட்ட எல்.முருகன்..!!

Featured

தமிழகத்தில் பாஜக ஆட்சியமைத்தால் அறநிலையத்துறை என்ற துறையே இருக்காது – ஷாக்கிங் ட்வீட் போட்ட எல்.முருகன்..!!

தமிழகத்தில் பாஜக ஆட்சியமைத்தால் அறநிலையத்துறை என்ற துறையே இருக்காது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் உள்ள உலக பிரசக்தி பெற்ற ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோவிலில் ஆந்திராவை சேர்ந்த ஐயப்ப பக்கதர்கள் சிலரை கோவில் பாதுகாவலர்கள் கடுமையாக தாக்கியதால் கோயிலில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஐயப்ப பகதர்கள் தாக்கப்பட்ட வீடியோ இணையத்தில் பரவி வைரல் ஆன நிலையில் இச்சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள அறநிலையத்துறை அதிகாரிகள், ஆந்திராவை சேர்ந்த 34 ஐயப்ப பக்தர்கள், உண்டியலை வேகமாக அடித்ததுடன் கோயில் பணியாளரையும் தாக்கியுள்ளதால் இந்த சம்பவம் சண்டையாக மாறியுள்ளது என விளக்க கொடுத்திருந்தனர்.

இந்நிலையில் கோவிலுக்குள் நடந்த இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அவர்களும் அவரது கண்டனத்தை பதிவு செய்துள்ளார் .

இதுகுறித்து எல்.முருகன் விடுத்துள்ள கண்டன செய்தியில் கூறியதாவது :

கோயிலுக்கு வரும் பக்தர்களை அநாகரீகமாக நடத்துவதையும், இந்து கோயில் பாரம்பரியத்தை சீர்குலைப்பதிலும் தொடர்ந்து முழு முச்சுடன் செயல்பட்டு வரும் அறநிலையத்துறைக்கும், தமிழக அரசுக்கும் எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் பக்தர்கள் மீது சரமாரி தாக்குதல்..!

கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் பணம் பறிக்கும் அறநிலையத்துறை..!

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையே தேவையில்லை.

இந்துக்களை பிடிக்காத திமுக அரசிடம் வேறு எதை எதிபார்க்க முடியும்..!

தமிழகத்தில் பாஜக ஆட்சியமைத்தால் அறநிலையத்துறை இருக்காது என தனது கண்டன செய்தியில் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் பொருட்களின் எடை சரியான அளவில் இருப்பதை உறுதி செய்திடுக - TTV தினகரன் வலியுறுத்தல்..!!

More in Featured

To Top