Connect with us

“ரெட்ரோ” படத்தை சூர்யா இல்லை… இவருக்காக எழுதியேன்! | இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ரகசியம்..

Featured

“ரெட்ரோ” படத்தை சூர்யா இல்லை… இவருக்காக எழுதியேன்! | இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ரகசியம்..

சூர்யா தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியான கடைசி படம் கங்குவா, எதிர்பார்த்த வரவேற்பு இல்லாமல், வசூலில் தோல்வியடைந்தது. இந்தப்படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் “ரெட்ரோ” என்ற புதிய படத்தில் நடித்துள்ளார் சூர்யா. இதில் அவரது ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார்.

மேலும், ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ், கருணாகரன், நந்திதா தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ள இந்த படம் மே 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. “ரெட்ரோ படத்தின் கதையை முதலில் ரஜினி சாருக்காக எழுதினேன். அப்போது இது ஒரு முழு ஆக்ஷன் படம். பின்னர், அதை சற்று மாற்றி, காதல் கலந்த கதையாக மாற்றி சூர்யா சாரிடம் சொன்னேன்.” இந்த தகவல் ரசிகர்களை மேலும் ஆவலுடன் காத்திருக்க வைக்கிறது. மேலும் அப்டேட்டுகளுக்காக பக்கத்தை ஃபாலோ செய்ய மறக்காதீர்கள்!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சன் டிவி சுந்தரி சீரியல் புகழ் நடிகை கேப்ரியல்லாவிற்கு குழந்தை பிறந்தது.. அவரே பகிர்ந்த போட்டோ!

More in Featured

To Top