Connect with us

தமிழக மக்களுக்கும் எனக்கும் உள்ள காதல் சாதாரணமான காதல் அல்ல. அதையும் தாண்டி புனிதமானது – கமல்ஹாசன்

Featured

தமிழக மக்களுக்கும் எனக்கும் உள்ள காதல் சாதாரணமான காதல் அல்ல. அதையும் தாண்டி புனிதமானது – கமல்ஹாசன்

தமிழ்நாட்டு மக்களுக்கும், இந்தியாவுக்கும், எனக்கும் உள்ள காதல் சாதாரணமான காதல் அல்ல. அதையும் தாண்டி புனிதமானது என தேர்தல் பரப்புரையின்போது நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் கலகலப்பாக பேசியுள்ளார்.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார் .

அப்போது அங்கு கூடிருந்த திரளான மக்களிடம் எழுச்சி உரையாற்றிய அவர் கூறியதாவது :

நான் சீட்டுக்காக வரவில்லை. நாட்டுக்காக வந்துள்ளேன். திராவிட மாடலை பின்பற்றினால் இந்தியாவின் நுழைவுவாயிலாக தமிழ்நாடு இருந்திருக்கும்

உங்கள் மனங்களிலும் எனக்கு இடம் உண்டு. உங்கள் இல்லங்களிலும் எனக்கு இடம் உண்டு என்பதை அறிவேன்.

தமிழ்நாட்டு மக்களுக்கும், இந்தியாவுக்கும், எனக்கும் உள்ள காதல் சாதாரணமான காதல் அல்ல. அதையும் தாண்டி புனிதமானது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இளையராஜா - அமைச்சர் அன்பில் மகேஷ் சந்திப்பு - காரணம் என்ன தெரியுமா..?

More in Featured

To Top