Connect with us

IPL 2024 : ராஜஸ்தானிடம் மீண்டும் பணிந்தது மும்பை அணி..!!!

Featured

IPL 2024 : ராஜஸ்தானிடம் மீண்டும் பணிந்தது மும்பை அணி..!!!

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் சிறப்பாக விளையாடிய ராஜஸ்தான் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கெத்தாக வீழ்த்தியுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் ஜெய்ப்பூரில் உள்ள உலக புகழ் பெற்ற கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் RR – MI அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்டிக் பாண்டியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.

அதன்படி மும்பை அணியின் தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் மற்றும் ஹிட்மேன் ரோஹித் ஆகியோர் களமிறங்கினர். அணிக்கு சிறப்பான தொடக்க கொடுப்பார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையைக் இஷான் கிஷன் டக் அவுட்டாகி வெளியேற 6 ரன்கள் மட்டுமே எடுத்த ரோஹித் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை இழந்தார். அவரை தொடர்ந்து களம் கண்ட சூர்யகுமாரும் பெரியளவில் ஜொலிக்காமல் 10 ரன்னில் வெளியேறினார்.

இதையடுத்து திலக் வர்மா – வதேரா இணை பொறுப்புடன் ஆடி நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சிறப்பாக விளையாடி வந்த திலக் அரை சதம் கடந்து அசத்த மறுமுனையில் மிரட்டி வந்த வதேராவும் அரை சதம் கடப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 49 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.

அவரை தொடர்ந்து வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இறுதி கட்டத்தில் மும்பை அணி ரன்கள் எடுக்க தவறிவிட்டது.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி 179 ரன்கள் குவித்தது. இதையடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது ராஜஸ்தான் அணி விளையாடியது.

ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக வழக்கம் போல் இளம் புலி ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் களமிறங்கினர். ஆரம்பம் முதல் அதிரடியான ஆட்டத்தை கொடுத்த ஜோடி மும்பை பந்துகளை நாலாபுறமும் பறக்கவிட்டது.

கடந்து போட்டி வரை பார்முக்கு திரும்ப முடியமால் அவதிபட்டு வந்த இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்து அசத்தினார். மறுபக்கம் பொறுப்புடன் விளையாடி வந்த பட்லர் 35 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதையடுத்து கேப்டன் சாஞ்சுவுடன் இணைந்த ஜெய்ஸ்வால் தனது அதிரடியை தொடர்ந்தார் அட்டகாசமாக விளையாடிய ஜெய்ஸ்வால் 60 பந்துகளில் 104 ரன்கள் எடுத்தார். பின்னர் 18.4 ஓவர்களில் இலக்கை கடந்த ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி கெத்து காட்டியுள்ளது.

See also  பந்துவீச்சில் மிரட்டிவிட்ட கொல்கத்தா - டெல்லி அணி 153 ரன்கள் குவிப்பு..!!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top