Connect with us

IPL 2024 : தட்டுத்தடையின்றி ஆடிய லக்னோ – பஞ்சாப் அணிக்கு 200 ரன்கள் இலக்கு..!!!

Featured

IPL 2024 : தட்டுத்தடையின்றி ஆடிய லக்னோ – பஞ்சாப் அணிக்கு 200 ரன்கள் இலக்கு..!!!

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி பஞ்சாப் அணிக்கு எதிராக 199 ரன்களை குவித்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் லக்னோவில் உள்ள பிரபல கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் – லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டியில் போடப்பட்ட டாசில் பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது . அதன்படி அணியின் தொடக்க வீரர்களாக டீ-காக் மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்கினர்.

ஆரம்பம் அதிரடி காட்டிய இந்த ஜோடி எதிரணியின் பந்துகளை நாலாபுறமும் பறக்கவிட்டனர். இதில் பட்டய கிளம்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ராகுல் 15 ரன்களில்அட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார்.அடுத்த படிக்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வந்த வழி சென்றார்.

மறுபுறம் சிறப்பாக விளையாடிய அரைசதம் கடந்து அசத்திய நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த நிகோலஸ் பூரன் மற்றும் குர்னால் பாண்டியா சிறப்பாக விளையாடிய அணிக்கு தேவையான ரன்களை சேர்ந்தனர்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு லக்னோ அணி 199 ரன்களை சேர்த்து. இதையடுத்து 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி தற்போது விளையாடி வருகிறது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி இரண்டாவது தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தோல்விக்கு கிடைத்த பரிசு : மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ₹24 லட்சம் அபராதம் விதித்தது பிசிசிஐ..!!!

More in Featured

To Top